சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று (07) மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். வெள்ளி வேட்டி, சட்டை மற்றும் இஸ்லாமிய தொப்பி அணிந்து விஜய் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று மாலை 6.20 மணிக்கு நடைபெறவுள்ள நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்தைச் சேர்ந்த 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்கின்றனர். நோன்பு திறப்புக்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் சுமார் 2,000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா மற்றும் நோன்பு கஞ்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சி சமூக ஒற்றுமை மற்றும் பண்பாட்டு நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ள.
0 Comments