மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில் தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியபோது பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
எனினும் , தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
0 Comments