இந்திய தேசியக் கொடி மட்டும் நீக்கம் - பாகிஸ்தானில் அனைத்து நாடுகளின் கொடிகளும் பறக்கவிட்டபட்டன!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகின்றன. இந்திய அணி பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகின்றன. 

இதனால், கராச்சி மற்றும் லாகூர் மைதானங்களில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்படவில்லை; பாகிஸ்தானில் விளையாடும் அணிகளின் கொடிகள் மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளன. 

இந்திய தேசியக் கொடியை பாகிஸ்தான் மைதானங்களில் பறக்கவிடாதது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) விளக்கத்தின் படி, பாகிஸ்தானில் விளையாடும் அணிகளின் கொடிகள் மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளன; இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாததால், இந்திய கொடி பறக்கவிடப்படவில்லை. 

Post a Comment

0 Comments