தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -1 கப் ரவை – 1/2 கப், தயிர் – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமையையும், ரவையும் ஒன்றாக சேர்த்து மூன்று நிமிடம் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இது நிறம் மாறி விடக் கூடாது லேசாக வாசம் வரும் வரை வறுத்தால் போதும். இதை நன்றாக வறுத்த பிறகு இதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆற விடுங்கள்.
அடுத்து இந்த மாவில் தயிர் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவை தட்டு போட்டு அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். மாவு நன்றாக ஊறட்டும்.
அரை மணி நேரம் கழித்து கரைத்து வைத்த மாவில் கால் டீஸ்பூன் சமையல் சோடா மாவு சேர்த்து மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் இதில் நாம் ரவை சேர்த்திருப்பதால் முதலில் தண்ணீர் ஊற்றி இருந்தாலும் மாவும் மறுபடியும் கட்டியாக மாறி இருக்கும்.
இப்போது இந்த மாவு இட்லி ஊற்ற தயாராகி விட்டது. எப்போதும் போல அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து சூடானவுடன் இட்லி ஊற்றி எடுத்து விடுங்கள். இந்த இட்லிக்கு நல்ல காரசாரமான சட்னி எதுவாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.
0 Comments